திருமணம்… ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு.. அதனால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படுகிறது.  அன்று முதல் இன்றுவரை கோயில்களில் திருமணம் செய்து கொள்வது பெரும்பாலோனோருக்கு விருப்பமான ஒன்றாகும்.

சுவாமி சன்னதியில், சுவாமியின் நேரடி பார்வையில்,  மனையாளை கரம்பிடிக்கும் நிகழ்வு அனைவருக்கும் அமையும் வாய்ப்பு என கூறப்முடியாது. இருந்தாலும், கோவிலில் திருமணம் செய்வதால், மணமக்கள் மட்டுமின்றி அதில் கலந்துகொள்பவர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கிறது.

அதே வேளையில், தற்போதைய அவசரச்சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது.

“அறவோர்க் களித்தாலும் அந்தனர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’
ஆகவே ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்வது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என்பது விளங்குகிறது என்று என்று சிலப்பதிகரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

கணவனும் மனைவியும் ஒன்றையே நினைக்க வேண்டும். ஒன்றையே செய்ய வேண்டும். காட்சி எதுவாயினும், இரண்டு கண்களும் ஒன்றையேதான் பார்க்கும். அது போல, கணவனும் மனைவியும் ஒன்றையே நினைத்து ஒன்றையே செய்ய வேண்டும்.  அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம். அதுபோன்ற ஒரு நிகழ்வு சுவாமி சன்னதியில் நடைபெறுவதால் மணமக்கள் சிறந்து வாழ்வார்கள் என்று நம்ப்படுகிறது.

ஒரு சில ஜாதகர்களுக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.

மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர்.

மேலும், கோயிலில் வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படு வதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும்.

மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.

எனவேதேன் கோவில்களில் மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும் என ஆன்மிகம் கூறுகிறது.