நாளுக்கு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இன்று (ஞாயிற்றுகிழமை) நமீதா எலிமினேட் செய்யப்பட்டார். நேற்று, “எலிமினேட் செய்யப்படப்போவது கணேஷா, நமீதாவா” என்று கேட்டு டி.ஆர்.பி.யை எகிற வைத்தார்கள். (தவிர ஜூலியின் கதறலும் பரபரப்பை ஏற்படுத்தியது.)

எலிமினேட் செய்யப்படப்போகிறவர் பெயரை கமல் சொல்லாமல் நிறுத்துவதைப் போல விளம்பரங்கள் வெளியாகி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்தன. இந்த நிலையில், இன்று நமீதா எலிமினேட் செய்யப்பட்டார். கணேஷ் தப்பித்துக்கொண்டார்.

நமீதா வெளியேற்றப்படக் காரணம் என்னஞ் அவருக்கு ஏன் பார்வையாளர்கள் வாக்களிக்கவில்லை? (முன்னாள்) ஸ்டார் ஹீரோயின் என்ற கோதவில்தான் பிக்பாஸ் வீட்டுக்கள் நுழைந்தார் நமீதா. அவரை எல்லோம், “மேம்.. மேடம்” என்று மிக மரியாதையுடன் அழைத்தனர்.

அவரும் கண்டிப்பான வார்டன் போல, “இங்கே குப்பை கிடக்குது.. அங்கே பாத்திரம் கிடக்குது.. இது தப்பு.. சுத்தமா இருக்குது” என்று தத்தை(!) தமிழில் பேசி தலைவியாக உலா வந்தார்.

ஆனால் சில நாட்களில் அவர் மீதான மரியாதை சக போட்டியாளர்களிடையே குறைய ஆரம்பித்தது. மற்றவர்கலை சுத்தமாக இருக்கச் சொன்ன நமீதா, தான் அப்படி இல்லை. தான் சாப்பிட்ட மிச்சத்தை ஃப்ரிஜில் வைத்தது சக போட்டியாளர்களை முகம் சுழிக்க வைத்தது. தவிர வேலை எதுவும் பார்க்காமல் பிறரை விரட்டி வேலை வாங்குவதையே வேலையாக வைத்திருந்தார்.

இதெல்லாம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல.. பார்வையாளர்களுக்கும் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. தவிர இடையிடையே, “நீ கேடின்னா.. நான் பெர்ய கேடி” என்று வில்லி ரேஞ்சில் டயலாக் பேசி பயமுறுத்தினார்.

இன்னொரு காரணம்ஞ் ஆரம்பத்தில் காயத்ரியுடன் சேர்ந்துகொண்டு ஜூலியை ராக்கிங் செய்தார். ஜூலியும் பிழிய பிழிய அழுதார். பிறகு ஓவியாவை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். ஓவியா கண்டுகொள்ளவில்லை. மறுபடி ஜூலியை கலாய்க்க ஆரம்பித்தார். ஜூலியும் மீண்டும் அழ ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில், “அவ (ஜூலி) மூஞ்சியை உடைச்சுடுவேன்” என்றும் ஆத்திரம்காட்டினார். இதெல்லாம்தான் நமீதா மீது பார்வையாளர்களுக்கு ஒருவித எதிர்மனநிலையை ஏற்படுத்தியது.

அதே நேரம் வெளியேற்றப்பட இருந்த கணேஷ், சக போட்டியாளர்களிடம் இயல்பாக பழகுவதால் அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. அவர் தப்பித்தார்.