சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி, தொடர்ந்து தடுக்கி விழுந்து வருவது கண்டு, கால்பந்து ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

கேரளாவைப்போல், தமிழகத்தில் கால்பந்து விளையாட்டுக்கென்று பெரியளவில் ரசிகர் பட்டாளம் இல்லையென்றாலும், ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேர் கால்பந்தை விரும்பி ரசிப்பவர்கள்தான்.

கடந்தமுறை மொத்தம் 18 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று, ஒப்புக்குச் சப்பாணி அணியாக கடைசி இடம் பெற்றது சென்னை அணி. சரி, இந்தமுறையேனும் ஓரளவிற்கு பெர்ஃபார்ம் செய்யும் என்ற நம்பப்பட்ட நிலையில், தான் பங்கேற்ற முதல் 3 போட்டிகளிலும் குப்புறக் கவிழ்ந்துள்ளது அந்த அணி.

இந்தப் போட்டிகளில் சென்னை அணி சார்பாக ஒரு கோல்கூட அடிக்கப்படவில்லை. என்னதான் களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும், முன்கள வீரர்களின் ஃபினிஷ்ங் சரியில்லாத காரணத்தால், கோல்களைப் பெற முடியவில்லை.

புரோ கபடி போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடம்பெற்று தலையை தொங்கப்போட்டுக் கொண்டு ஊர் திருமப வேண்டிய நிலை. அதைப்போலவே கால்பந்து அணிக்கும் நிலைமையாகிவிட்டதே என்பதுதான் விளையாட்டு ரசிகர்களின் கவலையாக உள்ளது.