சென்னை,

ரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டை யன் சட்டசபையில் அறிவித்து உள்ளார்.

இன்று சட்டமன்றத்தில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மேல் நிலைப் பள்ளிகளிலும் 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

ஆனால், சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வைபை வசதி ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அமைச்சரோ தற்போதுதான் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.