சென்னை:
சென்னையில் இன்று மாலை வடசென்னையின் பல பகுதிகளில் உள்பட மாநகரரின் பல பகுதி களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெப்பத்தில் வாடி வந்த மக்கள் சற்றே மகிழ்ச்சி அடைநதனர்.
வெப்பசலனம் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது மிதமான மழை வரை கனமழை வரை கொட்டி வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
வடசென்னை பகுதிகளான பெரம்பூர்,  மூலக்கடை, மாதவரம், ரெட்ஹில், அண்ணா நகல், வடபழனி போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ளது.