மும்பை: இந்தியா – இங்கிலாந்து இடையே அகமதாபாத்தில் நடைபெறும் டி-20 தொடரைக் காண்பதற்கு, ரசிர்கர்களுக்கு அனுமதி தரப்படலாம் என்று பிசிசிஐ தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரில் ரசிகர்களை அனுமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எத்தனை ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது என்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் 50% இடத்தை நிரப்பும் அளவுக்கு ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

ஆனால், ரசிகர்களை அனுமதிப்பது என்பது அரசின் அனுமதியைப் பொறுத்து இருக்கிறது. புதிய விதிகள் இருந்தாலும், கொரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைபிடித்தாலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றுள்ளார் அவர்.

இந்தியா – இங்கிலாந்து இடையே, சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் தலா 2 டெஸ்ட் போட்டிகளுக்கு, ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது ஏற்கனவே தெளிவாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.