சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முடிவுகட்ட அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யவிருப்பதாக கோட்டை வட்டார  தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ந்தேதிமுதல் நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதுவரை 7 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்டு 30ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில், ஊரடங்கில் 2முறை பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் 3வது கட்ட தளர்வை மத்தியஅரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக்ததில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,  பல்வேறு தளர்வுகளுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை நீடித்து வருகிறது.  அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், மக்களின் நலன் கருதி அதனை தகர்க்க முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறை குறித்து  மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து புதுச்சேரியில் இன்று முதல் இபாஸ் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வாப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 1ந்தேதி முதல் இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.