சென்னை: ஐபிஎல் 2019 தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மே 7ம் தேதி, மும்பை இந்தியன்ஸ் அணியை, முதலாவது தகுதி போட்டியில் சந்திக்கும் சென்னை அணியில் சில சிக்கல்கள் களையப்பட வேண்டியுள்ளது.

கேதார் ஜாதவ் விளையாட முடியாத நிலையில், அவரின் இடத்தை துருவ் ஷோரி என்ற டெல்லி பேட்ஸ்மேன் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, தற்போது ஃபார்மில் இல்லாத ஷேன் வாட்சன் நிலையும் கவலைக்குரியதாய் உள்ளது.

அவருக்குப் பதிலாக நியூசிலாந்து நாட்டின் மிட்செல் சான்ட்னர் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தோனி என்ன முடிவெடுப்பார் என்ற கேள்வியும் உள்ளது.

போட்டி சென்னையில் நடைபெறுவது ஒரு பிளஸ்தான் என்றாலும், இந்த மந்தமான பிட்சில், ஐபிஎல் தொடர்களில் சென்னை அணியை, வேறெந்த அணியை விடவும் அதிகமுறை தோற்கடித்த மும்பை அணியுடனான ஆட்டத்தை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.