ஜோத்பூர்:

பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு விபரங்களை தெரிந்து கொண்ட பின்னர் ஆசாராம் கதறி அழுதார். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் கூறுகையில், ‘‘இனி சிறையில் நன்றாக சாப்பிடலாம், குடித்து மகிழலாம்’’என்று இந்தியில் தெரிவித்தார்.

தண்டனை அளிக்கப்பட்டதால் ஜோத்பூர் மத்திய சிறையில் உள்ள 2வது பிளாக்கிற்கு மாற்றப்பட்டார். ஆனால், உடனடியாக அவர் நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து அவரது வக்கீல்கள் கூறுகையில், ‘‘மீடியாக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தண்டனை வழங்க வேண்டிய காட்டாயம் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். என்று அவரது வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்.