லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட், நாளை துவங்கவுள்ள நிலையில், தொடர் சமனாகுமா? அல்லது இங்கிலாந்து வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டித் துவங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெற்றியை நெருங்கிவந்தும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் மோசமாக சொதப்பியதால் அந்த அணி தோல்வியை தழுவியது.

அதேசமயம், இரண்டாவது டெஸ்ட் போட்டி, தொடர் மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது டெஸ்ட் நடைபெறவுள்ளது.

இதிலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆடமாட்டார். பாகிஸ்தானின் பந்துவீச்சு வலுவாக இருக்கும் நிலையில், பேட்டிங்கில் அந்த அணி எழுச்சி கண்டால், தொடரை டிரா செய்யலாம்.