சிட்னி: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி, இன்று பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னி மைதானத்தில் துவங்குகிறது.

முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்றையப் போட்டியில் வென்றால், ஒருநாள் தொடர் தோல்விக்கு பதிலடியாக டி-20 தொடரை இந்திய அணி வெல்லலாம்.

ஆனால், பின்கள வரிசையில் பிரமாதமாக ஆடி ரன் ‍சேர்த்து, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழும் ஆல்ரவுண்டர் ஜடேஜா, மன அதிர்ச்சி பிரச்சினை காரணமாக டி-20 தொடரிலிருந்து விலகியுள்ளதால், இன்றையப் போட்டியில், அணியின் வேறு முக்கிய பேட்ஸ்மென்கள் சிறப்பாக ஆடியே தீர வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முந்தையப் போட்டியில், ஜடேஜாவுக்கு பதிலாக சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சாஹல், இன்றையப் போட்டியிலும் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மோசமாக செயல்பட்ட ஷமிக்கு பதிலாக, பும்ரா ஆடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றையப் போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.