மும்பை: 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையர்களை சிறை வைப்போம் என அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பேசினார். இது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட மேமேதை  அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர்  வஞ்சித் பகுஜன்  அகாதி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். இந்த கட்சியுடன்,  அம்பேத்கர் முன்னணி பரீப் பகுஜன் மகாசங் மற்றும் அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 தொகுதிகளில் போட்யிடுகிறது.

பிரகாஷ் அம்பேத்கர்  மகாராஷ்டிரா மாநிலம் சோலாபுர் மற்றும் அகோலா தொகுதியில் போட்டி யிடுகிறார். தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் யமத்மாலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் கலந்து கொண்டு பேசுனார்.

அப்போது, புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இழந்துள்ளோம். ஆனால் அமைதியாக இருக்க வேண்டுமாம். இந்த தாக்குதல் குறித்து பேசக்கூடாது என்கிறார்கள். தேர்தல் ஆணையம் எப்படி எங்களை இப்படி சொல்லலாம். சட்டப்படி இதைப்பற்றி பேச உரிமை உள்ளது. நான் பாஜகவை சேர்ந்தவன் கிடையாது.

ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தலை ஆணையர்களை இரண்டு நாளைக்கு சிறை வைப்போம். இந்த தேர்தல் ஆணையம் பொதுவாகச் செயல்படுகிறது என்று யாரும் எண்ண வேண்டாம். ஆளும் மத்திய பாஜக அரசுக்கு மட்டுமே ஆதரவாக மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

பிரகாஷ் அம்பேத்கர்  பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.