நெட்டிசன்:

ரவணன் சவடமுத்து அவர்களின் முகநூல் பதிவு:

நடிகர் திலகத்திற்கு சிலை அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அந்த சிலையை அலாக்காகத் தூக்கி வந்து மணிமண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். சந்தோஷம்.

இப்போது அந்தச் சிலையின் கல்வெட்டில் இந்தச் சிலையைத் திறந்து வைத்தது கலைஞர் மு.கருணாநிதி என்று எழுதப்பட்டிருந்ததை அழித்துவிட்டார்களாம்..! அதற்கு பதிலாக இப்போதைய ஆட்சியாளர்களின் பெயரை பொறித்திருக்கிறார்களாம்.

அரசு செலவாகவே இருக்கட்டும். ஆனால் அமைத்தவர் கருணாநிதிதான் அதே சிலையைத்தான் இவர்கள் தூக்கி வந்திருக்கிறார்கள். இப்போது ்கருணாநிதி பெயர்தானே உண்மையில் அதில் இருக்க வேண்டும்..? ஏன் அதை நீக்கிவிட்டு இப்போதைய ஆட்சியாளர்களின் பெயரை வைக்கிறார்கள்..? இது தவறில்லையா..?

இந்த முறைகேட்டை எதிர்த்து செயல் தலைவர் குரல் கொடுத்துவிட்டார். அடு்ததுக் குரல் கொடுக்க வேண்டியது நடிகர் திலகத்தின் குடும்பத்தினரும், திரையுலகத்தினர் அனைவரும்தான்..! கொடுப்பார்களா..? இதைச் செய்யாமல் படவுலகினர் இந்த விழாவில் கலந்து கொண்டால் நிச்சயமாக இது பெருமையற்ற.. அறமற்ற செயல்..!

குறிப்பாக.. தமிழக அரசை தொடர்ந்து தைரியமாக விமர்சித்துவரும் கமல்?