சென்னை: மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள், மே மாதம் 31ம் தேதிவரை தியேட்டர்களை மூடிவைக்க திட்டமிட்டிருந்தாலும், அரசு தரப்பிலோ ஜுன் 30 வரை அவற்றை மூடுவதற்கான திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தியாவில் இப்போதைக்கு ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், இந்த மாதம் முழுவதும் அது நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில தகவல்கள், மே முதல் வாரம் வரை அந்த ஊரடங்கு அமலில் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. எனவே, புதிய படங்கள் ரிலீஸ் என்று வருக‍ையில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களே முக்கியமானவை.

எனவே, ஜுன் 30 வரை மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டால், புதிய படங்கள் ஜுலை மாதம்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.