சிட்னி: வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்திருப்பதால், இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு, நடராஜனுக்கு கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதலில் வாய்ப்பு கிடைக்காத நடராஜன், நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டதால் இறுதி ஒருநாள் போட்டியில் இடம்பெற்று சிறப்பாக செயல்பட்டார்.

பின்னர், தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி காயமடைந்ததால், டி-20 தொடரில் முழுமையாக இடம்பெற்று சிறப்பாக செயல்பட்டார்.

அதன்பிறகு, ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். தற்போது, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்து வெளியேறியுள்ள நிலையில், ஜனவரி 7ம் தேதி சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமுடியாத சூழலில், நடராஜன் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.