நாடு முழுவதும் 17வது மக்களவை அமைப்பதற்கான  தேர்தல் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் கடந்த 18ந்தேதியே நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்ட நிலையில், தேர்தலில் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் பத்திரிகை.காம் இணைய  இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்ததை அனைவரும் பார்த்திருப்போம்.

இந்த நிலையில், வரும் 23ந்தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவடைந்ததும், மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா? பிரியங்கா காந்தியின் எதிர்காலம் என்ன என்பது போன்ற எமது தலைமை செய்தியாளரின் அதிரடி கேள்விக்கு ருசிகரமாக பதில் அளித்துள்ளார்  சேலத்தை சேர்ந்த பாலாஜி ஹாசன்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 38 தொகுதிகளிலும் யார் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையும் உறுதிபட கணித்து கூறியுள்ளார் பாலாஜி ஹாசன்….

பாலாஜிஹாசன் பேட்டியின் விறுவிறுப்பான முதல்பகுதி ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்… இறுதிப்பகுதி  இதோ உங்களுக்காக….