சென்னை:

டிகர் ரஜினிகாந்த் இன்று காலை 10.30 மணி அளவில் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இதனால் அவர் கட்சி பெயர்  மற்றும் கொள்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ரஜினி பிரஸ்மீட்டுக்காக தயாராகி வரும் லீலா பேலஸ்

அரசியலுக்கு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக கூறி வரும் ரஜினி, போருக்கு தயாராக இருக்கும்படி தனத ரசிகர்மன்றத்தினரை கேட்டுக்கொண்டிருந்தார். தமிழகத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்  நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா்.

கடந்த 5ந்தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை  அவர் சந்தித்த நிலையில், இன்று மீண்டும் சந்திக்க உள்ளார்.  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. அரசியல் கள நிலவரம், கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்  காலை 10.30 மணி அளவில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ரசிகர்கள் ஆவலோடு லீலா பேலஸ் ஓட்டல் அருகே குவிந்து வருகின்றனர்.