ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றிபெற, இலங்கை அணிக்கு 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது விண்டீஸ் அணி.

முதல் இன்னிங்ஸில், 96 ரன்கள் முன்னிலைப் பெற்ற விண்டீஸ் அணி, 4வது நாளில், சற்று அதிரடியாக ஆடியது. மொத்தம் 4 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்திருந்தபோது, 377 ரன்கள் முன்னிலைப்பெற்ற நிலையில், அந்த அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

துவக்க வீரர் பிராத்வெய்ட் 85 ரன்களை அடித்தார். மேயர்ஸ் 55 ரன்களையும், ஹோல்டர் 71 ரன்களையும் அடித்தனர். இதனையடுத்து. 72.4 ஓவர்களில் அந்த அணி 280 ரன்களை அடித்து டிக்ளேர் செய்தது.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 29 ரன்களை எடுத்துள்ளது. இலங்கை அணி வெல்ல முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் டிரா செய்ய முடியலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.