சென்னை:

யோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய அறையின் ஜன்னல் கதவு திறந்திருப்பதாக தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ளன. தமிழகத்திலும் தமிழகத்தில் 38தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்து வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் 3 இடங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் 23ந்தேதி வாக்குள் எண்ணப்பட உள்ளது. மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரி யில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய அறையின் ஜன்னல் கதவு திறந்திருப்பதாக தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ. புகார் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் அறையின் ஆயத்த பணிகளை முடித்த பிறகு நேற்று ஜன்னல் கதவுகளை மூடாமல் சென்றுள்ளனர் என்றும் ஆயிரம் விளக்கு தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ.கட்சி பிரதிநிதி அகமது புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.