விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மது பிரியர்கள் ஆர்வம் காட்டாததால், டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
பின்னர் கடந்த 7 ஆம் தேதி முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் அரசு மதுபானக்கடை திறக்க திறக்கப்பட்ட நிலையில் சிலர் வழக்கு தொடுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுபானக்கடையை திறக்க தடை விதித்தது.
அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்திற்கு சென்ற நிலையில் உச்ச நீதிமன்றமானது மதுக்கடை திறக்க அனுமதி அளித்தது.இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூரை தவிர்த்து மீண்டும் கடந்த 16 ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மதுபான கடையில் மது பிரியர்கள் மது வாங்க ஆர்வம் காட்டாததால் மதுக்கடை யானது வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மது வாங்க யாரும் வராததால் டோக்கன் வைத்துக்கொண்டு மதுபானக் கடை ஊழியர் ஏமாற்றத்துடன் காத்திருந்தார்.