சென்னை:

முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்  நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வாடகையில்லாமல் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்  நல்லக்கண்ணு குடும்பத்தினர், கடந்த மே மாதம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர்கள் குடியிருந்த வந்த  சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு அரசின்  குடியிருப்பு வாரிய வீடுகள் 25 ஆண்டுகள் பழமையானதால், அதை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் நோக்கில், அவர்கள் அங்கிருந்து வெளியே தமிழகஅரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் பூதாகாரமாக எழுந்த நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில், தமீமும் அன்சாரி இது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அப்போது  நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய, தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கக்கன், நல்லக்கண்ணு ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களுக்கு வாடகையில்லா வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.