ரிதாபாத்

டும் ஜீப்பில் ஒரு பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் செக்டர் 16 பகுதியில் ஒரு இளம்பெண் பணிபுரிந்து வருகிறார்.   கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் 23 வயதான அந்தப் பெண் தனது அலுவலகப் பணி முடிந்த பின் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.   அப்போது அங்கு வந்த ஒரு ஜீப்பில் இருந்த நால்வர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.   இந்த சம்பவம் அந்தப் பெண்ணின் சக ஊழியர்கள் முன்பு நடந்துள்ளது.

இந்தக் கடத்தலைக் கண்ட சக ஊழியர்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.   காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.   எங்கும் அந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்க முடியவில்லை.    இந்நிலையில் சிக்ரி என்னும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு இளம்பெண் காயம் அடைந்த நிலையில் உள்ளதாக தகவல் வந்தது.   அங்கு சென்ற காவல்துறையினர் அவர்தான் காணாமல் போன பெண் என்பதை கண்டறிந்தனர்.

அந்தப் பெண் ,”ஜீப்பில் கடத்திச் சென்ற நால்வரும் என்னை மாறி மாறி  பாலியல் பலாத்காரம் செய்தனர்.    இந்த சம்பவம் ஓடும் ஜீப்பில் இரண்டு மணி நேரம் நடந்தது.   பின்னர் அரை மயக்கத்தில் இருந்த என்னை சாலை ஓரமாக வீசி விட்டுச் சென்றனர்.   அதன் பிறகு என்ன நடந்ததென தெரியவில்லை”  எனக் கூறி உள்ளார்.

அந்தப் பெண் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நால்வரையும் தேடி வருகின்றனர்.