Corpse

க்னோ

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்த்தாக யோகி வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மரணம் அடைந்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ளது  பேங்கர்மால் தொகுதி.   இங்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ள குல்தீப் சிங் செங்கர் பாஜகவை சேர்ந்தவர்.   இவர் அதே ஊரை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரை சென்ற ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.  இது குறித்து அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்தும் ஏதும் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திடீரென அந்தப் பெண்  உ. பி, முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் வந்தார்.  தான் கொண்டு வந்திருந்த கேனிலிருந்து மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.  பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து காப்பாற்றி உள்ளனர்.  அந்தப் பெண்ணை காவல்துறைக் காவலில் வைத்தனர்.

இந்த பலாத்கார விவகாரத்தை தட்டிக் கேட்டதால் அந்த பெண்ணின் தந்தையை சட்டமன்ற உறுப்பினரின் சகோதரரும் வேறு சிலரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.   அவர் உன்னாவ் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.     தற்போது அந்தப் பெண்ணின் தந்தை  மருத்துவ்மனையில் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.   இந்த தகவலால் உ. பி.  மாநிலத்தில் கடும் பதட்டம் உண்டாகி உள்ளது.