சென்னை:

லக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து டில்லி செல்லும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் பெண் பைலட்களே இயக்கி வருகின்றனர். ஏர் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

பெண் விமானிகள் (பைல் படம்)

இன்று காலை  6.20 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகளுடன் டெல்லிக்கு சென்ற விமானத்தை விமானி கேப்டன் தீபா தலைமையிலான பணிப்பெண்கள் கொண்டகுழு இயக்கியது இதே  குழுவினர் டெல்லி சென்றுவிட்டு மீண்டும் பகல் 12.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்புகின்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஏர் இந்தியா நிறுவனத்தின்  52 விமானங்களை பெண்களே இயக்குவார்கள் என்றும் விமான நிறுவனம்  அறிவித்துள்ளது.

நியூயார்க், வாஷிங்டன், லண்டன் உள்பட 12 சர்வதேச விமானங்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களை பெண்கள் இயக்க உள்ளனர். இவற்றில் விமானி மற்றும் சிப்பந்திகள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பெண்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷ்வினி லோஹானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.