டெர்பி:

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக 282 ரன்களை இந்தியா நிர்ணையித்தது.


8 அணிகள் கலந்துகொள்ளும் 11வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்ரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 2வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

மழை காரணமாக இந்த போட்டி தாமதம் ஆனது. இதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கபட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி வீராங்கனைகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.குறிப்பாக ஹர்மன்பிரீத் கவுர் 114 பந்துகளில் 169 ரன்கள் குவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி நிர்ணையிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் குவித்துள்ளது. 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி பேட் செய்து வருகிறது.