‘தர்மபிரபு’ முதல் காட்சி முடிந்து வெளியே வந்த யோகி பாபு பத்திரிகையாளர்களிடம், உண்மையான விமர்சனத்தைக் கூறுங்கள் என கேட்டு கொண்டார்.

மேலும் “ஹீரோவாக நடிக்கக் கூடாது என்பதை கற்றுக் கொண்டேன். உலகத்துக்கே ஹீரோ எமதர்மன்தான். அந்தக் கதாபாத்திரம் கிடைத்ததுக்கு சந்தோஷப்படுகிறேன்.

இனிமேல் வழக்கம் போல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அனைவருடனும் இணைந்து காமெடிதான் பண்ணுவேன். நண்பர்கள் இருவரிடம் இணைந்து படம் பண்ணலாம் என்று சொல்லியிருந்தேன். அதை முடித்துவிட்டேன்.

வேறு எந்தவொரு படத்திலும் நாயகனாகப் பண்ணும் திட்டமில்லை” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.