கொல்கத்தா: தொகுதி மக்கள் விரும்பவில்லை என்றால் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டசபை தேர்தல் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடக்க உள்ளது. திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

திரிணமூலில் இருந்து பாஜக சென்ற சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக மமதா அண்மையில் அறிவித்து இருந்தார். நாளை அவர் அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்கிறார்.

இந் நிலையில், நந்திகிராமில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட மமதா பேசியதாவது: நான் வேட்புமனு தாக்கல் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் தாக்கல் செய்யமாட்டேன். என்னை உங்கள் மகளாக கருதினால் தான் மனு தாக்கல் செய்வேன். நான் வெளிநாட்டவர் என்று சிலர் சொல்கிறார்கள். நான் ஒரு பெங்காலி என்று தெரிவித்துள்ளார்.