சென்னை:

‘‘டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்படுத்த முடியாவிட்டால் தமிழக அரசு விலகிக்கொள்ளலாம்’’ என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் ‘‘பள்ளிப் படிப்பை முடிக்காததால் எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் புரியும். டெங்கு காய்ச்சல் என் மகளுக்கு வந்ததால் அதைப்பற்றி தெரியும்.

டெங்கு காய்ச்சலை அரசு கவனிக்க வேண்டும். இல்லையேல் நான் உங்களை கவனிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

A high school drop out may not perceive Neet problem.But Dengu i know My child almost died of it. Work on it Tn Govt. If unable move aside

— Kamal Haasan (@ikamalhaasan)
July 20, 2017

 

பள்ளிப் படிப்பை முடிக்காதவன்
” நீட்” ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்

— Kamal Haasan (@ikamalhaasan)

July 20, 2017