டில்லி

த்திய தொழிலார்நலத்துறையின் வரைவு அறிக்கையில் பணி நேரம் 12 மணியாக அதிகரிக்க  பரிந்துரைக்கபப்ட்டுள்ளது.

தொழிலாளர் நலச் சட்டங்கள் பாஜக அரசால் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன.   இவற்றுக்கான ஒவ்வொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  அவற்றுக்கான வரைவு ஆணைகளும் மக்களின் கருத்துக்காக வெளியிடப்படுகின்றன.

அவ்வகையில் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், சூழல் மேம்பாடு குறித்து ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.   இந்த சட்டம் தொடர்பான வரைவு ஆணை நேற்று வெளியாகி உள்ளது.  இந்த வரைவு ஆணைக்கான ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகளை வழங்க 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு ஆணையில் அமைச்சர்கள் குழுப் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.  ஒஇது அனைத்து தொழிலாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.   பல்வேறு தரப்பினரும் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.