சென்னை:

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு நடக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘2019ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு நடைபெறுகிறது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், வட அமெரிக்கா தமிழ் பேரவை மற்றும் சிகாக்கோ தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநட்டை நடத்துகிறது’’ என்றார்.