சென்னை,

ம்போடியா நாட்டில் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு ,இன்று கோலாகலமாக தொடங்கியது.

கம்போடியா நாட்டின் சியம்ரீப் மாநில கலாசார மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து உலகத் தமிழ் கவிஞர்கள் 2 நாள் மாநாடு, இன்றும், நாளையும் (21, 22ந்தேதி) கம்போடியால் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் கவிஞர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின் துணை பிரதமர், சியம்ரீப் மாநில கவர்னர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மேலும்,  திருக்குறள் மொழி பெயர்க் கப்பட்டு கம்போடியா நாட்டின் கேமர் மொழியில் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று மாநாடு கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டு வரவேற்பு வீடியோ…