டோக்யோ

லகின் மிகவும் வயதான பெண்மணியான நபி தாஜிமா தனது 117 ஆம் வயதில் ஜப்பானில் காலமானார்.

ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் வசிப்பவர் நபி தாஜிமா.   இவருக்கு 117 வயதாகிறது.   உலகின் மிகவும் மூத்த  பெண்மணி என இவர் கருதப்படுகிறார்.   கடந்த 1900 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி இவர் பிறந்துள்ளார்.

தற்போது உடல் நிலை சரியில்லாததால் ஜப்பான் மருத்துவமனை ஒன்றில் நபி தாஜிமா  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவ மனையில் இவர்  மரணம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு அப்போது உலகின் மூத்தவரான வைலட் பிரவுன் இறந்தார்.  தற்போது அவருக்கு அடுத்தபடியாக மூத்தவரான நபி தாஜிமா மரணம் அடைந்துள்ளார்.   இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜப்பான் ஊடகங்கள் இவரது வீடியோக்களை ஒளிபரப்பி வருகின்றன.