அபுதாபி: உலகின் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும் 8,000 ஆண்டுகள் பழமையான முத்து, அபுதாபியில் உள்ள லூவ்ரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள், “இங்கு கற்காலத்திலிருந்து பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கு இது சான்று பகர்கின்றது” என்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான மராவா தீவில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அறையின் தரையில் இந்த இயற்கை முத்து கண்டெடுக்கப்பட்டது. அந்த அறை அந்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகால கட்டிடக்கலைகளை வெளிப்படுத்தியது.

முத்து வந்த அடுக்குகள் கிமு 5800-5600 வரை, புதிய கற்காலத்தில் கார்பன் தேதியிட்டவை என்று அமீரகத்தின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பழமையான முத்து கண்டுபிடிப்பு, அமீரகத்தில் நடந்ததையடுத்து நமது சமீபத்திய பொருளாதார மற்றும் கலாச்சார வரலாறு ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. இது வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை நீண்டுள்ளது என்று அதன் தலைவர் முகமது அல்-முபாரக் கூறினார்.

அக்டோபர் 30 ஆம் தேதி புகழ்பெற்ற பாரிஸ் அருங்காட்சியகத்தின் புறக்காவல் நிலையமான அபுதாபியின் லூவ்ரு அருங்காட்சியகத்தில் திறக்கப்படும் 10,000 ஆண்டு சொகுசு கண்காட்சியில் இம்முத்து முதல்முறையாக பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.