ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் புதுமுக இயக்குநரான டீகே இயக்கத்தில் கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா நடிப்பில் வெளியான படம் ‘யாமிருக்க பயமே’.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது குறித்த அறிவிப்பை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் பெரிய பட்ஜெட் படமா அல்லது சிறிய பட்ஜெட் படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று மட்டுமே பார்க்கிறார்கள். இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் ‘யாமிருக்க பயமே’ இரண்டாம் பாகத்துக்கான் ஆரம்பக்கட்டப் பணிகளில் இறங்கியிருக்கிறோம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும் என தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் .