போபால்

த்தியப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் வரும் 8 ஆம் தேதி அன்று பாஜகவை சேர்ந்த சத்ருகன் சின்ஹா, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரவீன் தொகாடியா ஆகியோர் இணைய உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.   இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளும் விவசாயிகள் தங்கள் கிராமத்திலேயே உள்ளனர்.  விளை பொருட்களுக்கு சரியான விலை மற்றும் விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகள் விவசாயப் பொருட்கள், பால் உள்ளிட்ட எதையும் நகரங்களுக்கு கொண்டு செல்வதை தடுத்து வருகின்றனர்.   அதே நேரத்தில் அதிகாரிகள் நகர்ப்புறங்களில் காய்கறிகள் வரத்து தேவையான அளவுகு உள்ளதகவும்,  எந்த ஒரு தட்டுப்பாடும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஜுன் ஆறாம் தேதி மாண்டசூர் நகரில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.   இதற்கான இரங்கல் கூட்டம்  வரும் ஆறாம் தேதி நடைபெறுவதாக இருந்தது.   இந்தக் கூட்டம் 8 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இதில் கலந்துக் கொள்ள சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா மற்றும் பிரவீன் தொகாடியா மாண்டசூர் வர உள்ளனர்.