மும்பை:

மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க கோரி பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா அகோலா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகளுடன் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால், யஷ்வந்த் சின்கா மற்றும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் காவலிலேயே போராட்டம் நடத்தி வரும் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், “போராட்டம் நடத்திய அனைவரும் விடுவிக்கப்பட்டோம் என போலீஸ் அறிவித்தாலும், நாங்கள் இங்கேயே போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டோம்.

போலீஸ் எங்கெல்லாம் எங்களை அழைத்து செல்கிறதோ, அங்கேயே எங்களுடைய போராட்டம் தொடரும். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்” என்றார். போலீஸ் அவரை நேற்று இரவு 9:30 மணியளவில் விடுவித்தது. ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.