ஏடன்:
மன் நாட்டில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 60 பேர் பலியானார்கள். ஏமன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவ முகாமை நோக்கி தற்கொலை படையை சேர்ந்த் தீவிரவாதி  அதிவேகமாக காரை ஓட்டி வந்து முகாம் மீது மோதச் செய்து,  வெடிகுண்டை வெடிக்க செய்தான்.

இந்த பயங்கரமான வெடி விபத்தில் குறைந்தது 60 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.  சம்பவ இடத்தில் பலியானவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குண்டு வெடிப்பில்  படுகாயமடைந்தவர்கள்  உடனடியாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
ஏமனில், கடந்த மார்ச் 2015 முதல் நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை சுமார், 6,600 பொது மக்கள் பலியாகியுள்ளனர். சுமார் 80 சதவீத மக்கள் மனிதாபிமான உதவி தேடி அகதிகளாக பல நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.