ரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் வேலை பார்த்த டாக்டரை கல்யாணம் செய்த நடிகை கஸ்தூரி, இன்று இரண்டு குழந்தைகளின் தாய். சென்னையில் செட்டில் ஆகி விட்டார்.
20 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றிய அனுபவம் இருப்பதாலோ என்னவோ, கஸ்தூரிக்கு உலக அனுபவங்கள் கொஞ்சம் அத்துபடி..


தெலுங்கு டி.வி. சேனலான ஈ.டி.வி.க்கு கஸ்தூரி அளித்துள்ள பேட்டியில், தான் ’மிஸ் மெட்ராஸ்’’ ஆனது முதல் இப்போது ’’யூ -டியூப்பில்’’. வார்த்தை மோதலில் ஈடுவது வரை பல விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
’’ நீங்கள் கலகம் செய்பவரா?’’ என்று கேட்டபோது அவர் அளித்த பதில் இது:
‘’ ஆம். நான் கலகம் செய்பவள் தான். எனது வயது அதற்கு காரணம் என நினைக்கிறேன். .25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ‘டீன்ஏஜ்’ பெண். அப்போது என் மனதில் நியாயமான சிந்தனைகள் உதித்தாலும், பேசும் துணிச்சல் கிடையாது. வாழ்க்கையில் நான் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்கள், இன்பம், துன்பம் ஆகிய எல்லாமும் சேர்ந்து என்னை கலகக்காரி ஆக்கிவிட்டது. என் கண் முன்னால் ஏதாவது நடந்தால் என்னால் வாயை பொத்திக்கொண்டு சும்மா இருக்க முடியாது’’ என்றவர், ’’மூன்று பேர் தனது வாழ்க்கையை செம்மை படுத்தியவர்கள்’’ என்கிறார்.
யார் அவர்கள்?
‘’ முதலில் இளையராஜா. மன அழுத்தத்தில் நான் இருந்த சமயங்களில் அதிலிருந்து விடுபட இளையராஜா இசையே துணையாக இருந்தது. புதுமைபித்தன் கதைகள் என்னை ஈர்த்தவை.
அப்புறம் ,சீரடி சாய்பாபா.
என் மகள் இன்று உயிரோடு இருக்கிறாள் என்றால், அவரது அருள் தான் காரணம்”’ என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், கஸ்தூரி.

-பா.பாரதி.