மும்பை:
கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பந்து பளபளக்கும் வகையில்,  பந்துவீச்சாளர்கள் இனிமேல் எச்சில் தடவக்கூடாது ஆனால், வியர்வை தடவலாம் என ஐசிசிஐ அறிவித்து உள்ளது.
கொரோனா பரவலுக்கு எச்சில் முக்கிய காரணமாக கருதுவதால், இனிமேல் பந்து வீச்சாளர்கள் பந்துகளின் பளபளப்புக்கு எச்சில் தடவக்கூடாது என்று தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனில் கும்ப்ளே தலைமையிலான தொழில்நுட்ப குழு,  மருத்துவ துறை தலைவருடன்  ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய அனில் குப்ளே,  “நாம் தற்போது அசாதாரண காலங்களில் வாழ்கிறோம், இன்று குழு அளித்துள்ள பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாக்கும் அதே வேளையில் எங்கள் விளையாட்டின் சாரத்தை பாதுகாக்கும் வகையில் கிரிக்கெட்டை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கான இடைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பந்தை ஆடுவதற்கு, குறிப்பாக மிக நீண்ட வடிவத்தில், உலகெங்கிலும் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் செர்ரி மீது உமிழ்நீரைப் பயன்படுத்தினர், ஆனால் இந்த நடைமுறை இப்போது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகக் காணப்படுகிறது. கடந்த மாதம் ஐ.சி.சி உமிழ்நீர் பயன்பாட்டை தடை செய்ய நினைத்தபோது, ​​இது கிரிக்கெட் சகோதரத்துவத்தில் பரபரப்பான விவாதமாக மாறியது.
ஆனால் தற்போது, பாதுகாப்பை கருத்தில்கொண்டு, உமிழ்நீரால் பந்தை பளபளபாக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதாகவும்,  வியர்வை மூலம் கொரோனோ வைரஸ் பரவுவது உறுதி செய்யப்படாததால் வீரர்கள் வியர்வை மூலம் பந்தை பளபளப்பாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டி நடைபெறும் நாட்டில் உள்ள சர்வதேச நடுவர்களையே கள நடுவர்களாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இரண்டு அணிகளுக்கு போட்டி என்றால் அந்த நாட்டு நடுவர்களை தவிர மற்ற நாடுகளை சேர்ந்த நடுவர்களே போட்டியின் போது கள நடுவர்களாக நியமிக்கப்படுவர். ஆனால்,
தற்போது, ஊரடங்கு அமலில் இருப்பதால் விமான பயணம் சிக்கலாக அமைந்துள்ளது. இதனால் நடுவர்கள் பயணம் மேற்கொள்வதும் சிக்கலாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.