டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,64,594 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,127 அதிகரித்து மொத்தம் 2,58,352 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,51,740 பேர் குணமாகி இதுவரை 1,97,28,532 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 37,06,105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

அவ்வகையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,64,594 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 30,94,48,585 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.