சென்னை

தீபாவளியை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

th

சென்னையில் இருந்து நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்காக இயக்கப்படுகின்றன. தீபாவளி நேரத்தில் வழக்கமாக இருக்கும் கூடத்தை விட நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடடம் குறையாவாக இருந்தது. பேருந்துகளில் முக கவசத்துடன் பயணம் செய்த பயணிகள் இருக்கைககளிலும் முக கவசத்தை கழற்றாமல் பயணம் செய்தனர். வந்தவர்கள் அனைவருக்கும் பேருந்தில் இடம் கிடைத்தது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பேருக்கும் மேல் பயணம் செய்துள்ளனர். கோயம்பேட்டில் வழக்கத்தை விட அதிக அளவில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

பொருட்களை வாங்க வரும் மக்களுக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்,  குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை, தி நகர், மற்றும் புரசைவாக்கம் பகுதியில் அதிக அளவில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இந்த பகுதிகளில் மாநகர பேருந்துக்கள் வழக்கத்தடை விட அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.