டில்லி

கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் 8,73,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் சற்றே குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும்  அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது 1,14,09,595 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1,58,892 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,10,25,631 பேர் குணம் அடைந்து 2,20,401 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  எனவே கொரோனா பரிசோதனை நாடெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது.

அவ்வகையில் நேற்று ஒரே நாளில் 8,73,350 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.   நேற்று வரை மொத்தம் 22,82,80,763 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.