டில்லி

நேற்று இந்தியாவில் 9,13,319 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 68,206 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,20,39,210 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக்கப்பட்டு பாதிக்கப்பட்டோரைத் தனிமையில் வைக்கும் பணி நாடெங்கும் நடந்து வருகிறது.   ஆயினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நேற்று அதாவது மார்ச் 28 ஆம் தேதி அன்று 9,13,319 ,மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 24,18,64,161 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.