டில்லி

நேற்று இந்தியாவில் 11,13,966 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நேற்று வரை சுமார் 1.23 கோடி பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி அதில் 1.63 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.    இதில் 1.15 கோடி பேர் குணமடைந்து தற்போது 6.10 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   கொரோனா பாதிப்பு ஏற்பட்டோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் நேற்று 11,13,966 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 24,59,12,587 மாதிரிகள் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.