(பைல் படம்)

சென்னை:

ன அழுத்தத்தை குறைக்கும் வகையில் போலீசாருக்கு மீண்டும்  யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார காவல்துறையினர்  2,500 போலீசாருக்கு இன்று யோகா பயிற்சி தொடங்கி உள்ளது.

இந்த  பயிற்சியை சென்னை மாநகர காவல்  ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்துபேசினார்.

அப்போது, மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும் என்றும், சென்னையில் பல இடங்களில் முதற்கட்டமாக 10 ஆயிரம் போலீசாருக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக காவலர்கள் பலர் தற்கொலை முடிவை எடுத்து வரும் நிலையில், சென்னை ஐகோர்ட்டும் தமிழக காவல்துறைக்கு பல்வேறு அறிவுரைகள் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மனவளக் கலை மன்றம் மூலம் போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.