விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது மாணவி கண்ணாடி  தொட்டிக்குள் 10 நிமிடம்  யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ். கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் யோகவீணா. 10வயாபகும் இந்த சிறுமி,  அந்த பகுதியைச் சேர்ந்த  சீன்ராஜ், கண்ணாத்தாள் தம்பதியினரின் மகளாவர். இவர் அந்த பகுதியில், உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்தியுள்ள யோகவீணா தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.

கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில், கண்ணாடியிலான  மூடிய மீன் தொட்டிக்குள்,  கண்ட பேரண்டாசனா என்ற ஆசனத்தை 10 நிமிடங்கள் குளோபல் உலகசாதனை கமிட்டியினர் முன்பு   செய்து அசத்தியுள்ளார்.

சிறுமியின் சாதனையை பாராட்டிய, குளோபல் உலகசாதனை கமிட்டியினர்,  யோகவீணாவுக்கு குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு எனும் சாதனையாளர் பட்டத்துடன், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.

ஏற்கனவே இதுபோன்ற ஒரு மாணவி கண்ணாடி தொட்டிக்குள்  8 நிமிடம் யோகாசனம் செய்து  சாதனை நிகழ்த்தியிருந்தார். தற்போது, இந்த சாதனையை யோகவீணா முறியடித்துள்ளார்.