கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

திரைப்படத் தொழிலாளர்களின் நிலை குறித்து, அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் என அனைவரும் முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்

அதை தொடர்ந்து சிவகுமார் குடும்பத்தினர் , பார்த்திபன் , மனோ பாலா , சிவகார்த்திகேயன் , விஜய் சேதுபதி , ரஜினிகாந்த் தனுஷ் , கமல் , இயக்குனர் ஷங்கர் , உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உதவியுள்ள நிலையில், தற்போது நடிகர் யோகி பாபு பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக 50 மூட்டை அரிசி கொடுத்துள்ளார். ஒவ்வொன்றும் 25 கிலோ அரிசி கொண்டது.