லக்னோ:

த்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்ட காந்தி சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,  சிலையைத்தான் உடைக்க முடியும்; காந்தியின் பெருமையை அழிக்க முடியாது என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஜலாவுன் நகரில் உள்ள கல்லூரி வளாகத்தில்  உள்ள காந்தி மர்ம நபர்கள் நள்ளிரவில் உடைத்து உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்தார்கள். இப்போது காந்தி சிலையை உடைத்துள்ளார்கள். நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வந்து, சிலையை உடைத்து, காந்தியை அவமானப்படுத்திய கோழைகளுக்கு இது வாழ்நாள் சாதனையாக இருக்கலாம். ஆனால், இப்படி செய்வதால், அம்பேத்கர், காந்தி ஆகியோரின் பெருமைகளை யாராலும் அழித்து விட முடியாது என்று கூறியுள்ளார்.

கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த அந்த காந்தி சிலையை, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.