மிழகத்தின் திருச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்த   மகாலட்சுமி என்ற இளம்பெண் 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களை  மயக்கி அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் நகைகளை சுருட்டி அல்வா கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாலட்சுமியிடம் பணம் மற்றும் நகையை கொடுத்து ஏமாந்த பல ஆண்கள்,  அதுகுறித்து புகார் கொடுக்க பயந்து ஒதுங்கி சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. மகாலட்சுமி என்ற பெயர் கொண்ட அந்த இளம்பெண் பெயருக்கேற்றார்போல அழகாகவும், அம்சமாகவும் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவரை நோக்கியவர்களை தனது அழகால் மயக்கி அவர்களிடம் இருந்து பணத்தை லட்சம் லட்சமாக உருவியுள்ளார்.

சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது 2வது கல்யாணத்துக்கு பெண் தேடி அலைந்துள்ளார். அப்போது தனியாருக்கு சொந்தமான மேட்ரிமோனி மூலம்  திருச்சியைசேர்ந்த ஒரு பெண்ணை தேர்வு செய்து மணம் முடித்தார். அவர்களின் திருமணம் கடந்த 2017ம் ஆண்டு இனிமே முடிவடைந்துள்ளது. இருவரும் சில காலம் சந்தோஷ வானில் சிறகடித்து பறந்த நிலையில்,  வேலை விஷயமாக அந்த இளைஞர் மீண்டும் சிங்கப்பூருக்கு பறந்துள்ளார்.

அவர் சிங்கப்பூர் சென்ற சில நாட்களில், மகாலட்சுமி தான் கர்ப்பம் அடைந்ததாக கூறி, கணவரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். இதனால் அப்பாவாகப் போகிற சந்தோஷ கனவில், அந்த இளைஞர் மனைவிக்கு தெரியாமலேயே உடனே சொந்த ஊரான திருவாரூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால், அங்கு அவரது மனைவி இல்லை வீடு பூட்டியிருந்தது. இதுகுறித்து பக்கத்து விடுகளில் விசாரித்தபோது, மகாலட்சுமி ஏற்கனவே எஸ்கேப்பானதுதெரிய வந்தது. அவரது மொபைல் போனும் ஆப் செய்யப்பட்ட நிலையில், மனைவி மகாலட்சுமியை காணாமல் தேடி அலைந்தார்.

எதிர்பாராதவிதமாக பேஸ்புக் வலைதளத்தில் தேடியபோது மகாலட்சுமி சிக்கினாள். அவரது பக்கத்தில் பல ஆண்களுடன் அவர் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தது. அதைக் கண்டவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பேஸ் புக் பதிவில் அவர் பல ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தெரிய வந்தது.

இதுகுறித்து தீவிரமாக விசாரித்த திருவாரூர் இளைஞர், மகாலட்சுமிக்கு ஏற்கனவே 15 பேருடன் கல்யாணம் ஆகி இருந்ததும்,  6 மாசத்துக்கு முன்பு இதுபோல ஒரு கல்யாணம், அதன் காரணமாக  கருவுற்று அதனை கலைத்தும் உள்ளது,

விசாரணையில், இதுபோல பலரை மயக்கி மணம் முடித்தும், பின்னர் அவர்களிடம் மனைவி போல சில நாட்கள் உல்லாசமாக இருந்து, நகை மற்றும் முடிந்த வரை பணத்த கறந்துவிட்டு எஸ்கேப்பாகி வந்ததும் தெரிய வந்தது.

இதையறிந்த  திருவாரூர் இளைஞர், தன்னைப்போல இனிமேல் யாரும் ஏமாறக்கூடாது என்று நினைத்து, காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரினார்.

போலீசார் விசாரணை நடத்தியபோது, மகாலட்சுமி தற்போது ஆந்திராவில் இருப்பதாகவும், அங்கு யாரையோ திருமணம் செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். விரைவில், அவரை கைது செய்து நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளதாக திருவாரூர் இளைஞர் கூறி உள்ளார்.