சென்னை

மிழகத்தில் கொரொனாவால் மரணம் அடைந்தோர்களில் மிகவும் இளையவரான 36 வயது இளைஞரைப் பற்றிய தகவல்கள் இதோ

நேற்று முன் தினம் இரவு சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு இளைஞர் மரணம்  அடைந்துள்ளார்.  அவருக்கு வயது 36 ஆகும்.  அவர் குன்றத்தூர் பகுதியில் வசிப்பவர் ஆவார்.  அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா எனச் சோதனை செய்யப்பட்டது

அந்த இளைஞருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று முன் தினம் இரவு சோதனை முடிவுகள் வரும் முன்பே மரணம் அடைந்துள்ளார்.   நேற்று கிடைத்த அவருடைய சோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதையொட்டி அவருக்கு கொரோனா பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்தது.

அந்த விசாரணையில் அவருக்குக் குன்றத்தூர் பகுதியில் உள்ள காய்கறி வியாபாரிகள் மூலம் கொரோனா தொற்றி உள்ள்ள்துகண்டறியபட்டுள்ளது.  அவருடைய வீட்டின் அருகில் உள்ள ஐந்து காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.   அந்த இளைஞரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்..